Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் 2021 ஆம் ஆண்டு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தன. அப்போது மின் வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் சில தொழிலாளர்கள் தகுதி தேர்வு வாயிலாக மாவட்டம் தோறும் தேர்ந்தெடுத்து, மொத்தம் 15 ஆயிரம் தொழிலாளர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் 9 ஆயிரத்து 613 நபர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இப்படி தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களை அந்த அந்த மாவட்டத்தில் நியமனம் செய்யாமல் 300 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மாவட்டங்களுக்கு பணியில் அமர்த்தப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிறது. இந்த கேங்மேன் தொழிலாளர்கள் மின்கம்பம் ஊன்றுவதற்கு பள்ளம் தோண்டுதல், புதிதாக மின் பாதை கொண்டு போவதற்கு கம்பம் ஊன்றுவதற்கு ஆகிய பணிகளுக்காக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் கம்பியாளர், மின் பாதை ஆய்வாளர், மின் கணக்கீட்டாளர், அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் என அதிகப்படியான காலிப் பணியிடங்கள் உள்ளதால், கேங்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களை மேற்கண்ட பொறுப்பில் உள்ளவர்கள் உடைய பணிகள் அனைத்தையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். கட்டாயப்படுத்துவதோடு இல்லாமல், செய்யவில்லை என்றால் மிரட்டுகிறார்கள். ஆகவே கேங்மேன் தொழிலாளர்கள் குடும்பத்தை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் பணி புரிவதாலும், அதிகமான பணி சுமையாலும், மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலோடு பணி புரிவதால், 70-க்கும் மேற்பட்ட கேங்மேன் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே இறந்து விட்டார்கள். மின் வாரியத்தில் கள உதவியாளர் என்று இருந்தால் அவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பதற்காகவே கேங்மேன் என்ற ஒரு புதிய பொறுப்பை உருவாக்கி, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் மின்வாரியத்தில் உள்ள அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய அளவுக்கு பணி சுமை கொடுக்கிறார்கள். இதனால் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கேங்மேன் என்ற தொழிலாளர்களை கள உதவியாளராக அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, மேலும் கேங்மேன் தொழிலாளர்களை அவர் அவர் மாவட்டத்தில் பணிபுரிவதற்கான அரசாணையும் உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

கஞ்சா போதை ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் படுகொலையை கண்டித்து அறிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் திரு.முத்துக்குமார் பணியாற்றி வந்தார். நாவலூர் பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் மற்றும் அவர்களின்…

ByBySenthil KumarMar 28, 2025

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த காவல் துறையை வரவேற்று அறிக்கை

சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது…

ByBySenthil KumarMar 27, 2025

தேமுதிக இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பத்திரிக்கை செய்தி – 22.03.2025

“இஃதார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (22.03.2025) மாலை 6.00 மணியளவில், தேமுதிக கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில்…

ByBySenthil KumarMar 22, 2025

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை…

ByBySenthil KumarMar 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...