நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த சோகத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் வயதிலேயே தனது உயிரை இழந்த மிஸ்ஹாபின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மேலும், வனவிலங்குகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க அரசு மற்றும் வனத்துறை கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.




