தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு தலைமை கழகத்தில் கொடியேற்றி, கேப்டன் சிலை நிறுவுதல், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், தலைமை கழகத்தில் “கேப்டன் ஆலயம்” பெயர் பலகை திறப்பு விழா வரும் 14.09.2024 காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
