Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரத்தில்அனைத்து கட்சி, அனைத்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஆளும் திமுக அரசு பழைய பேருந்துநிலையத்தை புதுப்பித்து நவீன பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டி அறிக்கை

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரத்தில்அனைத்து கட்சி, அனைத்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஆளும் திமுக அரசு பழைய பேருந்துநிலையத்தை புதுப்பித்து நவீன பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டி அறிக்கை

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரத்தின் வளர்ச்சி என பொய்யான பிம்பத்தை உருவாக்கி தற்போது இயங்கி வருகின்ற பேருந்து நிலையத்தை 8.1/2 கிலோ மீட்டர் தொலைவில் இராசிபுரம் நகரத்திற்கு தொடர்பே இல்லாத அணைப்பாளையத்தில் உள்ள சுமார் 140 ஏக்கர் அளவுள்ள படையப்பா நிறுவனத்தின் நிலப்பகுதியில் இராசிபுரம் பேருந்து நிலையத்தை அமைக்க ஆளும் தி.மு.க நிர்வாகிகள் முடிவு செய்து 02.07.2024 அன்று நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து 3 நாட்களிலேயே 05.07.2024 அன்று மாலையில் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் அழைக்காமல் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். அந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான திரு.ராஜேஸ்குமார்M.P. அவர்கள் பேருந்து நிலையம் அமைப்பதற்கு யாரேனும் நிலம் தானமாக வழங்கினால் ஏற்றுக் கொள்ளலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி படையப்பா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களிடம் இருந்து 7.03 ஏக்கர் நிலம் தானமாக நகராட்சி ஆணையாளர் அவர்களின் பெயரில் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஆளும் தி.மு.க. நிர்வாகிகளின் இந்த மோசடி இராசிபுரம் நகரம் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேற்படி வெளிப்படை தன்மையற்ற இராசிபுரம் நகராட்சி நிர்வாகம் ஆளும் கட்சியினரின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இராசிபுரத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்த பட்டு, நெசவு, கைத்தறி மற்றும் விசைத்தறி. நகைத்தொழில் முற்றிலும் அழிந்துள்ளது. எனவே இராசிபுரம் ஆத்தூர், பேளுக்குறிச்சி, திருச்செங்கோடு, மல்லூர் மார்க்கத்தில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் வியாபார நுகர்வே இராசிபுரம் நகரத்தின் அடிப்படையாகும். இவர்களின் மூலம் நடக்கும் வியாபாரங்களை நம்பியே இராசிபுரத்தில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இராசிபுரம் நகரத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிராம மக்களை நம்பியே இயங்குகிறது. தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் உள்ளேயே இருக்கும் உழவர் சந்தை மற்றும் வார சந்தை இருப்பதால் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மக்கள் கோரிக்கை ஏற்று வேறு இடத்திற்கு பேருந்து நிலையத்தை மாற்றமால், பழைய இடத்திலேயே பேருந்து நிலையத்தை புதுப்பித்து உடனடியாக ஆளும் திமுக அரசு செயல்படுத்த வேண்டும்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...