Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • காவிரியின் குறுக்கே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசிமணல் அணை கட்ட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்த ஒத்த கருத்தை உருவாக்க வேண்டி அறிக்கை

காவிரியின் குறுக்கே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசிமணல் அணை கட்ட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்த ஒத்த கருத்தை உருவாக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாட்டில் 6 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 22 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கும் காவிரி உரிமையை மீட்டெடுக்க நாம் ஒன்றுபட்டு போராட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக அரசு மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டில் உபரி நீர் கடலில் கலக்க செய்வதைத் தடுத்து நிறுத்தி, கர்நாடகாவிற்கு குடிநீர் போக, மீதத் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு வழங்குவோம் என்கிற தவறான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையைத் தயார் செய்து மத்திய அரசிடம் வழங்கி அதற்கான அனுமதி கோரித் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மேட்டூர் அணை நிரம்பிய பிறகு காவிரியில் உபரி நீர் கடலில் கலப்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உடனடியாக மேகதாது அணைகட்ட அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. பெங்களூர் – கனகபுரா தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக நிலப்பகுதியில் இருந்து கீழ்நோக்கி ஆயிரம் அடிக்கு கீழே காவிரியும், அர்க்காவதி நதிகளும் இணையும் சங்கமம் என்கிற இடம் சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இங்கிருந்து காவிரி நதி தமிழகம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் வழியில் உயர்ந்த மலை முகடு களுக்கிடையே அகலம் குறைவான மிக ஆழமான நதியாகவும் உள்ள இடம் மேகதாது ஆகும். இவ்விடத்தில் அமைந்துள்ள காளி கோவில் முதல் தமிழ்நாடு எல்லை துவங்குகிறது. இடது கரை முழுமையும் கிருஷ்ணகிரி வன எல்லைக்கு உட்பட்டது. வலது கரை முழுமையும் ஒகேனக்கல் வரை கர்நாடக எல்லையில் உள்ளது. நீர்வழி பாதையில் காவிரி ஆறு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மேகதாது அணையைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு தற்போது உபரி நீரை மட்டுமே வழங்கி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாதாந்திர தண்ணீரை விடுவித்ததாக கணக்கில் காட்டி கர்நாடக தப்பித்து வருகிறது. மேகதாட்டு அணை கட்டப்பட்டால் உபரி நீரும் தமிழ்நாட்டுக்கு வராமல் தடுத்து விட முடியும் என்கிற உள்நோக்கத்தோடு கர்நாடகம் செயல்படுகிறது. எனவே தமிழக அரசு இதில் உடனடியாக முழு கவனம் செலுத்தி தமிழக மக்களுக்கும், விவசாயத்திற்கும் தேவையான தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு கீழே அணைகள் கட்டி தண்ணீரைத் தேக்க இயலாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கலுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் ராசிமணல் அருகே புதிய அணை கட்டி 63 டிஎம்சி தண்ணீரை மேட்டூர் அணை நிரம்பிய பிறகு உபரி நீர் வெளியேற்றக் கூடிய சூழலில் ராசிமணல் அணையில் தேக்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் அடிக்கல் நாட்டியுள்ளார். அவ்வாறு தேக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணை மூலமாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். உபரி நீர் கடலில் கலப்பதை மிகைப்படுத்தி மேகதாது அணை கட்ட எடுக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் அடிப்படை நோக்கோடு தமிழ்நாட்டில் ராசிமணலில் அணை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக ராசிமணல் அணை கட்டுமான பணிக்கு ஒத்தக்கருத்தை உருவாக்கிட போர்க்கால நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே 10ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஆசிரியரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதும்,…

ByBySenthil KumarSep 11, 2026

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்கள் 91 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும்…

ByBySenthil KumarSep 11, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...