*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *“வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (24.08.2026) *புரட்சி அண்ணியார் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்* அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள், ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. மேலும் புதுடெல்லியில் உள்ள டெல்லி தமிழ் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக 1 இலட்சம்* காசோலை வழங்கப்பட்டது. மேலும் விருத்தாசலத்தில் நாளை (25.08.2026) *சுயதொழில் இலவச தையல் பயிற்சி மையம், இலவச கணினி பயிற்சி மையம் திறப்பு, இஸ்திரி பெட்டி (அயன் இயந்திரம்), தையல் இயந்திரம், மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், வழங்கப்படவுள்ளது.
வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இயன்றதை செய்வோம் இல்லாதவரக்கே என்ற கொள்கைப்படி பல்வேறு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கண் சிகிச்சை பரிசோதனை முகாம்* நாளை (25.08.2026)கலந்து கொண்டு பயன்பெறலாம்.உடன் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.










