Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல், இலங்கை அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“முந்தைய ஆட்சிகளில் கடிதம் எழுதுவதோடு பணி முடிந்துவிட்டது. ஆனால், நமது அரசு அப்படி கிடையாது” என்று கூறிய முதல்வர் விஜய் அவர்கள், தற்போது அதே பாணியில் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை வருகை தர உள்ள நிலையில், அவர் வருவதற்கு முன்பாகவே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். எனவே “மீனவ நண்பன்” என்று வார்த்தைகளால் முதல்வர் விஜய் அவர்கள் சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...