கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த நபரை (மாணிக்கம் – வயது 31), அச்சிறுமியின் பாட்டி துணிச்சலுடன் எதிர்கொண்டு, கத்தியை (அரிவாள்) பயன்படுத்தி தடுத்து நிறுத்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதும், வரவேற்கத்தக்கதுமான செயலாகும்.
தனது பேத்தியை காப்பாற்றுவதற்காக எவ்வித அச்சமுமின்றி துணிச்சலுடன் எதிர்த்து நின்ற அந்த பாட்டியின் தைரியம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. இன்று (14.08.2026) ஆடிப்பூரம் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், பெண் சக்தியையும், துணிச்சலையும் போற்றும் வகையில், அந்த பாட்டியை ஆண்டாளின் அவதாரமாகவே பார்க்கத் தோன்றுகிறது. தன்னுடைய பேத்தியை காப்பாற்றுவதற்காக அவர் வெளிப்படுத்திய வீரமும், தைரியமும், ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும்.
நான்கு வயது சிறுமியை காப்பாற்றிய அந்த பாட்டியின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆடிப்பூரம் நாளில் பெண் சக்தியின் அடையாளமாக திகழ்ந்த அந்த பாட்டி, உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர் ஆவார்.




