ஆகஸ்ட் 25ஆம் தேதி, புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்டம், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கேப்டன் அவர்கள் வகுத்த “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற உயரிய கொள்கையை பின்பற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். கேப்டன் அவர்கள் காட்டிய மனிதநேயப் பாதையைப் பின்பற்றி, அவரது 74வது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினம்” என தமிழகம் முழுவதும் எழுச்சியுடனும் சிறப்புடனும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தேமுதிக, தலைமை கழகம், (கேப்டன் ஆலயம்), கோயம்பேடு, சென்னை – 107.




