தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அது சமயம் கூட்டணிக்கட்சி தலைவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர், சிறுபான்மை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு.SM.இதயத்துல்லா அவர்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயாளர் திரு.KAM.முஹம்மது அபூபக்கர் அவர்கள், விடுதலை சிறுத்தைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆளூர் ஷா நவாஸ்,MLA., அவர்கள், மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு.M.H.ஜவஹருல்லா,MLA., அவர்கள், மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் கலைக்குயில் திரு.இப்ராஹிம் அவர்கள், SDPI தலைவர் நெல்லை திரு.முபாரக் அவர்கள் நிகழ்ச்சியில் கந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
எனவே இந்நிகழ்ச்சிக்கு தாங்கள், தங்கள் பத்திரிகை மற்றும் ஊடகத்திலிருந்து நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களை அனுப்பி வைத்து செய்திகளை சேகரித்து தங்கள் பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளியிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




