Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், தனியறையில் சிக்கியிருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்தார். இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், கல்யாணியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றவாளியான ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். கடமையின்போது நேர்மையாகவும் உண்மையுடன் செயல்பட்ட ஒரு பெண் அதிகாரியை, அவர் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்காக கொடூரமாகக் கொலை செய்துள்ள இந்த செயல் கடுமையாயன கண்டனதிற்குறியதும், மனிதநேயமற்றதும் ஆகும். இத்தகைய கொடிய குற்றங்கள் கடுமையாக தண்டிக்கப்படாத பட்சத்தில், சட்டத்தை நம்பி நேர்மையுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சமூகத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கை இன்மையையும் இது ஏற்படுத்தும். எனவே, இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு LIC அலுவலகத்தில் வேலையும், இழப்பீடு தொகையும் வழங்கிட வேண்டும்.  மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...