Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டி அறிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டி அறிக்கை

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு கல்லூரி மாணவி ஒருவர் தன் காதலருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர் வாகனத்தை தாக்கி அந்த பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது வன்மையாக கண்டிக்க கூடியது. பாலியல் வன்கொடுமை யார் செய்தார்கள் என்பதை கண்டறிந்து உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். கோயம்புத்தூர் விமான நிலைய என்பது முக்கியமான பகுதி, அந்த இடத்திலேயே இது போன்ற செயல்கள் நடக்கிறது என்றால் காவல்துறை என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி மக்களுக்கு எழுகிறது. அதேபோல் சிசிடிவி கேமரா அனைத்து இடத்திலும் செயல்படுகிறதா? இல்லையா? என்பதையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே அண்ணா பல்கலை கழகத்தில் இது போன்ற செயல்கள் நடந்திருக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை இனி எங்கும் நடக்காத வண்ணம் காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் உறுதியான பாதுகாப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சிசிடிவி கேமராவை அனைத்து இடத்திலும் பொருத்தி, தவறுகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பையும், சிகிச்சையும் தரவேண்டும். இனிமேல் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எங்கும் நடக்காத வண்ணம் தமிழக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarNov 11, 2025

டெல்லி தலைநகரில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 8 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

ByBySenthil KumarNov 11, 2025

விருதுநகரில் கோவிலில் பாதுகாவலர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

விருதுநகர் மாவட்டம், HR & CE கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியில் இரு பாதுகாவலர்கள் (2 பேர்) கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம், தமிழகம்…

ByBySenthil KumarNov 11, 2025

உலக கிரிக்கெட் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை

மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது…

ByBySenthil KumarNov 3, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...