Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் சிரமத்திற்கு உள்ளாகியதைக் கண்டித்து அறிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் சிரமத்திற்கு உள்ளாகியதைக் கண்டித்து அறிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என சிகிச்சைக்கு வரும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி (வீல்சேர்) வழங்காமல் 3 மணி நேரம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கி பணம் கொடுத்தால்தான் சக்கர நாற்காலி கொடுக்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? அரசு மருத்துவமனை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதால் இதற்குத் தீர்வாகுமா? மனிதநேயத்தோடு செயல்படாத அந்த அரசு மருத்துவமனையின்  ஊழியர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தேமுதிக சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.  

Releated Posts

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேர்க்கு இரங்கல் செய்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து…

ByBySenthil KumarNov 25, 2025

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர்…

ByBySenthil KumarNov 24, 2025

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும்.…

ByBySenthil KumarNov 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...