Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition) முடித்துவிட்டு வீடு திரும்பிய பொழுது, பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் மின் கசிவு ஏற்பட்டு, தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். முறைகேடாக மின் கேபிள் பொருத்தி உயிர் இழப்பிற்கு காரணமான மின் வாரியத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், மேலும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக மின்சாரத்தை துண்டிக்க பலமுறை போன் செய்தும் இணைப்பு எடுக்காமல் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இப்பகுதியில் வீடுகளுக்கு மின் கேபிள்கள் வீட்டு வாசல்களிலும், மேல்புறத்திலும் முறையில்லாமல் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஆளும் அரசு சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி சிங்கப்பூருக்கு இணையான சென்னையாக ஆக்குவோம் என்றனர். ஆனால் இன்றைக்கு சிங்காரச் சென்னை, சீரழிந்த சென்னையாக குண்டும், குளியுமாக மழை நீர் தேங்கி, மின்சார வயர்கள் அறுந்து, உயிர்களை பலி வாங்கும் ஒரு மாநகராட்சியாக இருக்கிறது. எனவே இந்த நிலைகளை மாநகராட்சி மேயர் அவர்களும், ஆளும் கட்சியும் இணைந்து சீர்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பான மாநகராட்சியாக உருவாக்கம் வேண்டும். உயிரிழந்த சிறுனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியை வழங்க வேண்டும்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டி அறிக்கை – 20.06.2025

தமிழகத்தில் இந்த (2025) ஆண்டு ‘மா’ (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி…

ByBySenthil KumarJun 20, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...