Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருவேற்காடு நகராட்சியில் கோலடிகிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

திருவேற்காடு நகராட்சியில் கோலடிகிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தின் வார்டு 4, சின்னக்கோலடி பகுதியில் வசித்து வரும் கோலடி கிராமம், சர்வே எண். 22, 23, 24 அடங்கிய சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்ச்சல் புறம்போக்கு நிலமாகும். இதில் 8.48 ஏக்கர் நிலத்தில் மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளின் பாதாளச் சாக்கடை கழிவு நீரைக் கொண்டு வந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், திருவேற்காடு நகராட்சி நிர்வாகமும் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளார்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தவுள்ள நிலத்தின் கிழக்கில் தலித் மக்கள் வசிக்கும் சின்னக்கோலடி மிக அருகிலும், திருவேற்காடு நகரத்தின் 18 வார்டுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரியும், அங்கன்வாடி மையமும், கோலடி அரசு தொடக்கப்பள்ளியும், சுமார் 1000 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் அரசு உயர்நிலைப் பள்ளியும், மற்றும் கோவில்களும், லஷ்மி நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கோலடி கிராமத்தில் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களின் எதிர்காலமும், எதிர்கால சந்ததியினரின் நலனும் பாதிக்கப்படும் நிலையுள்ளது. எனவே இத்திட்டத்தை மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படுத்தாமல், மக்களின் நலனைக் காக்க இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தைத் தமிழக அரசு வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...