Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் என்று ஒருநாள் எப்போதும் இருக்கக் கூடாது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதி செய்யப்பட வேண்டும். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று அப்போதே மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார். அதனால் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பட்டினி என்பதும், உணவு இல்லை என்ற நிலை எந்த காலத்திலும் வரக்கூடாது என்பதில் கேப்டன் அவர்கள் உறுதியாக இருந்தார். அதன் வெளிப்பாடாகத்தான் அன்னதானத்தைப் பல ஆண்டுகளாக அவர் சார்ந்த சினிமாத் துறை மூலமாகவும், ரசிகர் மன்றங்கள் மூலமாகவும் மற்றும் தேமுதிக கட்சியின் மூலமும் கேப்டன் அவர்கள் அன்னதானத் திட்டத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார். எனவே பட்டினி தினம் என்று ஒரு தினம் எங்கும் இல்லாத வண்ணம் இருக்க வேண்டும். இருப்பதிலே சிறந்த தானம் “அன்னதானம்” அந்த அன்னதானத்தை வழங்கி, பட்டினி சாவோ, பட்டினியால் மக்கள் வாடும் நிலை என்பது தமிழ்நாட்டில் எங்கும் வராத வண்ணம் தேமுதிக என்றைக்கும் மக்களுக்கு துணை நிற்கும்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...