Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்டிய செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்து, தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்குது. மேலும் திருநெல்வேலியில் அரிவாளால் வெட்டுவது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் பள்ளியில் ஒழுக்கத்தையும், கல்வியையும் பயில வேண்டிய இடத்தில் அரிவாள் வெட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்க கூடியது. மேலும் உடனடியாக தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தில் அந்த மாணவனுக்கு உரிய தண்டனை கொடுத்து, இனி இதுபோன்று நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் “நல் ஒழுக்கம்” என்ற ஒரு பாடத்திட்டத்தை செயல்படுத்தி, எதிர்கால குழந்தைகளுடைய வாழ்க்கைக்கு அறிவுரை செய்து, இதுபோன்று அரிவாள் கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிவு பாதையில் இருந்து காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...