Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தவெக தலைவர் திரு.விஜய், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு.சி.விஜயபஸ்கர், திரு.SP.வேலுமணி, திரு.செங்கோட்டையன் மற்றும் அதிமுக முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்பி யுமான திரு.சு.திருநாவுகரசர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் திரு.ஜான் பாண்டியன், SDPI கட்சி திரு.முகமது முபாரக், புதிய நீதி கட்சியின் தலைவர் திரு.ஏ.சி.சண்முகம், பஜாக மாநில செயலாளர் திரு.வினோஜ்P.செல்வம், திரு.SG.சூர்யா மற்றும் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக  செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், சார்பு அணி நிர்வாகிகள் என்று தமிழகம் முழுவதும் வால்போஸ்டர் ஒட்டியும், பேனர்கள் வைத்தும், கொடி அமைத்தும், நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கி சிறப்புப் பூஜைகளும் செய்து தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தண்ணீர்ப்பந்தல் திறந்தும் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மற்றும் நேரில் வந்தும் தொலைப்பேசியிலும், சமூகவலைத்தளத்திலும், பத்திரிக்கை விளம்பரம் செய்தும் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பொதுமக்களுக்கும் மற்றும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...