Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் தோரண நுழைவாயிலை அகற்றும் போது தூண் சாய்ந்து மேலே விழுந்ததில் ஜேசிபி (JCB) ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். அருகில் நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி நுழைவாயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மதுரை மாநகராட்சி உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதால் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. அரசின் இந்த கவனக்குறைவு மிகவும் கண்டிக்கக் கூடிய விஷயம். பிரதான சாலையில் உள்ள மிகப் பழைமையான நுழைவாயில் இடிக்கப்படுகிறது என்றால் திட்டமிடுதல், மக்களுக்கு முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அதன் பிறகு பணியைத் தொடராமல் மெத்தனப் போக்காக செயல்பட்டுள்ளது, மதுரை மாநகராட்சியின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். மேலும் படுகாயம் அடைந்தவருக்கு மருத்துவச் சிகிச்சையும், நிதி உதவியும் வழங்க வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

முன்னாள் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் திருவுருவப் படத்திற்கு…

ByBySenthil KumarOct 9, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களின் மூலம் அஞ்சலிசெலுத்திய அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில்…

ByBySenthil KumarOct 9, 2025

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள்…

ByBySenthil KumarSep 30, 2025

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்…

ByBySenthil KumarSep 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...