Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளில் 13 மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த இலங்கை அரசை கண்டித்து அறிக்கை

இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளில் 13 மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த இலங்கை அரசை கண்டித்து அறிக்கை

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடித் தான் மீன் பிடிப்பதற்கு வருகின்றனர். அவர்களை அத்துமீறி கைது செய்து அவர்களின் உடைமைக்கும், உயிருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலே தொடர்ந்து இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்திற்கு உரிய விஷயம். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அவர்களை படகுகளுடன் சிறைப்பிடிப்பதும், மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. பலமுறை இந்தியா அரசு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும்  கைது நடவடிக்கையிலிருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லை.  இது தமிழக மீனவர்களிடையே மிகப் பெரிய ஒரு கொந்தளிப்பையும், மன வேதனையும் உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு “இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்” இந்த நாளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கி மனித நேயத்தோடு நீதியும், நேர்மையும் நிலைநாட்ட வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் 28 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இன்று (05.03.2025) கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் திருமதி.எஸ்.பூர்ணஜோதி…

ByBySenthil KumarMar 7, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மகளிர் தின வாழ்த்து செய்தி

சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளா இருந்து, தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள்…

ByBySenthil KumarMar 7, 2025

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து  அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி…

ByBySenthil KumarFeb 19, 2025

சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும்,…

ByBySenthil KumarFeb 16, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...