Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை கழக அறிவிப்பு

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை கழக அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி படுகொலை செய்ததை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக புதுக்கோட்டை, திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் கனிம வளத்தை பாதுகாக்க போராடி வந்த சமூக ஆர்வலரை படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், பெண்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும்.

Releated Posts

தேமுதிக கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் 28 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இன்று (05.03.2025) கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் திருமதி.எஸ்.பூர்ணஜோதி…

ByBySenthil KumarMar 7, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மகளிர் தின வாழ்த்து செய்தி

சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளா இருந்து, தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள்…

ByBySenthil KumarMar 7, 2025

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து  அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி…

ByBySenthil KumarFeb 19, 2025

சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும்,…

ByBySenthil KumarFeb 16, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...