Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தலாமே?. அதை விட்டுவிட்டு கண் துடைப்பு நாடகமாக விளம்பரத்தில் கண்ணீரை வடிப்பதும், மறுபுறம் பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து தமிழ்நாட்டைப் போதை நாடாக மாற்றியது ஒன்று தான் திமுகவின் சாதனை ஆகும். மது விற்பனை ஒன்று மட்டும் தான் சாதனையே தவிர, தமிழகத்தில் முன்னேற்றமும், பாராட்டுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதை இந்த (மது விற்பனை) சாதனையை, வேதனையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு வீண் விளம்பரங்கள் மூலம் விளம்பரத்தைத் தேடாமல், ஒரே கையெழுத்து மூலம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினாலே, தமிழகத்தில் இங்கு யாரும் போதையின் பாதையில் போக மாட்டார்கள். அதேபோல திமுக அமைச்சர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழ்நாட்டில் போதையை ஒழித்துவிடலாம். எனவே இதையெல்லாம் செய்யத் தவறிய தமிழக முதல்வர் அவர்கள் வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்பரத்தைத் தேடிக்கொள்கிறாரே தவிர, உண்மையில் மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இந்த அரசின் இரட்டை நிலைப்பாடு கண்டனத்துக்குறியது.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...