Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தலாமே?. அதை விட்டுவிட்டு கண் துடைப்பு நாடகமாக விளம்பரத்தில் கண்ணீரை வடிப்பதும், மறுபுறம் பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து தமிழ்நாட்டைப் போதை நாடாக மாற்றியது ஒன்று தான் திமுகவின் சாதனை ஆகும். மது விற்பனை ஒன்று மட்டும் தான் சாதனையே தவிர, தமிழகத்தில் முன்னேற்றமும், பாராட்டுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதை இந்த (மது விற்பனை) சாதனையை, வேதனையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு வீண் விளம்பரங்கள் மூலம் விளம்பரத்தைத் தேடாமல், ஒரே கையெழுத்து மூலம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினாலே, தமிழகத்தில் இங்கு யாரும் போதையின் பாதையில் போக மாட்டார்கள். அதேபோல திமுக அமைச்சர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழ்நாட்டில் போதையை ஒழித்துவிடலாம். எனவே இதையெல்லாம் செய்யத் தவறிய தமிழக முதல்வர் அவர்கள் வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்பரத்தைத் தேடிக்கொள்கிறாரே தவிர, உண்மையில் மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இந்த அரசின் இரட்டை நிலைப்பாடு கண்டனத்துக்குறியது.

Releated Posts

தேமுதிக கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் 28 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இன்று (05.03.2025) கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் திருமதி.எஸ்.பூர்ணஜோதி…

ByBySenthil KumarMar 7, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மகளிர் தின வாழ்த்து செய்தி

சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளா இருந்து, தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள்…

ByBySenthil KumarMar 7, 2025

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து  அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி…

ByBySenthil KumarFeb 19, 2025

சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும்,…

ByBySenthil KumarFeb 16, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...