Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஒரே நாளில் யார் அனுமதி கொடுத்தது, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததையும் கண்டித்து அறிக்கை

தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஒரே நாளில் யார் அனுமதி கொடுத்தது, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததையும் கண்டித்து அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி எதிர்க்கட்சிகள் போராடுகின்ற போது அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யபடுகின்ற ஒரு நிலை தமிழகம் முழுவதும் இருக்கின்ற நியலையில், திமுகவுக்கு மட்டும் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த யார் அனுமதி கொடுத்த?. இன்றைக்கு எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நசுக்குகின்ற வகையில், ஜனநாயகத்திற்கு எதிராக, இந்த ஆட்சிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க கூடாது, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, அமைதி பேரணி நடத்தக்கூடாது, ஆனால் திமுகவுக்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரே நாளில் அனுமதி யார் வழங்கினர். உங்கள் மீது யார் வழக்கு பதிவு செய்வது? இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். மேலும், மதுரை மேலூரில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடுகின்ற மக்களுக்கு இந்த அரசு அனுமதி மறுக்கின்றது. ஊராட்சிகளை பேரூராட்சியுடனும், நகராட்சியுடனும், மாநகராட்சியுடனும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை முன்வைக்கும் பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டு, ஆனால் திமுக நடத்துகின்ற ஆர்ப்பாட்டதிற்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கின்றனர், இது எந்த வகையில் நியாயம். திமுகவுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? என்ற கேள்விக்கு திமுக அரசும், முதலமைச்சர் அவர்களும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக திமுகவின் ஆட்சி இருக்கிறது. இதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...