Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – 02.01.2025

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – 02.01.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் 06.01.2025 திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

திருவேற்காடு நகராட்சியில் கோலடிகிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தின் வார்டு 4, சின்னக்கோலடி பகுதியில் வசித்து வரும் கோலடி கிராமம், சர்வே எண். 22, 23, 24 அடங்கிய சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட…

ByBySenthil KumarMay 30, 2025

பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து…

ByBySenthil KumarMay 28, 2025

பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் என்று ஒருநாள் எப்போதும் இருக்கக் கூடாது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதி…

ByBySenthil KumarMay 28, 2025

தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்கள்மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை)…

ByBySenthil KumarMay 25, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...