Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இனிய புத்தாண்டு வாழ்த்து செய்தி

இனிய புத்தாண்டு வாழ்த்து செய்தி

       இன்பம் பெருகும், துன்பம் ஒழியும், என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நம் இந்திய நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதியாக கிடைத்திட வேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு, கஞ்சா மற்றும் போதை இல்லாத தமிழகமாக வரும் 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டுமென தேமுதிக சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Releated Posts

திருவேற்காடு நகராட்சியில் கோலடிகிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தின் வார்டு 4, சின்னக்கோலடி பகுதியில் வசித்து வரும் கோலடி கிராமம், சர்வே எண். 22, 23, 24 அடங்கிய சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட…

ByBySenthil KumarMay 30, 2025

பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து…

ByBySenthil KumarMay 28, 2025

பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் என்று ஒருநாள் எப்போதும் இருக்கக் கூடாது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதி…

ByBySenthil KumarMay 28, 2025

தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்கள்மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை)…

ByBySenthil KumarMay 25, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...