Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை

கடந்த 18.11.2024 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை (வயது 26) என்ற யானை தாக்கி திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த திரு.சதாசிவம் மகன் திரு.உதயகுமார் (45) என்ற உதவி பாகனும், அவரை காண வந்திருந்த அவரது உறவினர் கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டம், பலுகல் பகுதியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் நாயர் மகன் திரு.சிசுபாலன் (வயது 58) என்பவரும் உயிரிழந்துள்ளார். திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ யானை தாக்கி உயிரிழந்த திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. எனவே உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோருக்கு பெரும் தொகையை நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...