Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை

கடந்த 18.11.2024 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை (வயது 26) என்ற யானை தாக்கி திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த திரு.சதாசிவம் மகன் திரு.உதயகுமார் (45) என்ற உதவி பாகனும், அவரை காண வந்திருந்த அவரது உறவினர் கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டம், பலுகல் பகுதியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் நாயர் மகன் திரு.சிசுபாலன் (வயது 58) என்பவரும் உயிரிழந்துள்ளார். திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ யானை தாக்கி உயிரிழந்த திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. எனவே உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோருக்கு பெரும் தொகையை நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

முன்னாள் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் திருவுருவப் படத்திற்கு…

ByBySenthil KumarOct 9, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களின் மூலம் அஞ்சலிசெலுத்திய அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில்…

ByBySenthil KumarOct 9, 2025

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள்…

ByBySenthil KumarSep 30, 2025

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்…

ByBySenthil KumarSep 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...