Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • வேளாண் கல்லூரி மாணவர்களை அரசு பணிக்கு ஈடுபடுத்தியதை கண்டித்து அறிக்கை

வேளாண் கல்லூரி மாணவர்களை அரசு பணிக்கு ஈடுபடுத்தியதை கண்டித்து அறிக்கை

தமிழக அரசு வேளாண் நிலம் மற்றும் பயிர் இவைகளை டிஜிட்டல் முறைப்படுத்தும் தமிழக அரசின் செயல் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் இவர்கள் செய்ய வேண்டிய வேலையை எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் அலட்சியப்போக்கோடு வேளாண் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தப்படுவது கண்டனத்திற்குரியது. இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது இரண்டு மாணவிகளை பாம்பு மற்றும் விஷ பூச்சால் தீண்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது சம்பந்தமாக பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் சூழலில் (13.11.2024) அன்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அரசின் அலட்சிய போக்கையும், மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லாததை காட்டுகிறது.  இதை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே வேளாண் கல்லூரி மாணவர்களை அரசுப் பணிக்கு ஈடுபடுத்தாமல் அவர்கள் கல்வி கற்க இந்த அரசு உறுதி செய்யவேண்டும்.

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...