Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை இரயில் விபத்து குறித்து அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை இரயில் விபத்து குறித்து அறிக்கை

திருவள்ளூர்  மாவட்டம்  கவரப்பேட்டையில் நேற்று (11.10.2024) இரவு ரயில் விபத்து ஏற்பட்டது துரதிஷ்டமானது. ரயில் விபத்துக்கான காரணம் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். மெயின் லையனில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் லூப் லையனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது மிகப் பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குத் தொழில்நுட்ப பிரச்சனை காரணம் என்று சொல்கின்றனர். மக்கள் உயிரைத் துச்சமாக நினைத்து கவனக்குறைவாகச் செயல்படும் அரசுகள் உடனடியாக விபத்துக்கள் நடக்காத வண்ணம் கவனம் செலுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் இல்லை என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காத வண்ணம் கவனமாகச் செயல்பட வேண்டியது அரசுகளின் கடமை ஆகும். எனவே காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

Releated Posts

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026

முன்னாள் கழக தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல்…

ByBySenthil KumarJan 19, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 17.01.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்)…

ByBySenthil KumarJan 17, 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும்…

ByBySenthil KumarJan 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...