Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் தோரண நுழைவாயிலை அகற்றும் போது தூண் சாய்ந்து மேலே விழுந்ததில் ஜேசிபி (JCB) ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். அருகில் நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி நுழைவாயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மதுரை மாநகராட்சி உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதால் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. அரசின் இந்த கவனக்குறைவு மிகவும் கண்டிக்கக் கூடிய விஷயம். பிரதான சாலையில் உள்ள மிகப் பழைமையான நுழைவாயில் இடிக்கப்படுகிறது என்றால் திட்டமிடுதல், மக்களுக்கு முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அதன் பிறகு பணியைத் தொடராமல் மெத்தனப் போக்காக செயல்பட்டுள்ளது, மதுரை மாநகராட்சியின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். மேலும் படுகாயம் அடைந்தவருக்கு மருத்துவச் சிகிச்சையும், நிதி உதவியும் வழங்க வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...