தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கேப்டன் ஆலயம் தலைமைக் கழகத்தில் இன்று (25.12.2025) புரட்சி அண்ணியார் கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கழக கொடி ஏற்றி, குழந்தைகளுடன் கேக் வெட்டியும், மகளிர் அணியினருக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து அனைவருக்கும் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் உடன் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.







