Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்டிய செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்து, தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்குது. மேலும் திருநெல்வேலியில் அரிவாளால் வெட்டுவது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் பள்ளியில் ஒழுக்கத்தையும், கல்வியையும் பயில வேண்டிய இடத்தில் அரிவாள் வெட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்க கூடியது. மேலும் உடனடியாக தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தில் அந்த மாணவனுக்கு உரிய தண்டனை கொடுத்து, இனி இதுபோன்று நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் “நல் ஒழுக்கம்” என்ற ஒரு பாடத்திட்டத்தை செயல்படுத்தி, எதிர்கால குழந்தைகளுடைய வாழ்க்கைக்கு அறிவுரை செய்து, இதுபோன்று அரிவாள் கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிவு பாதையில் இருந்து காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...