Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை

பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், ஃபெங்கல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா, கள்ளச்சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு (06.01.2025) அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஜனநாயக முறைப்படி வன்முறைக்கு இடம் கொடுக்காமல், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல், ராணுவக் கட்டுப்பாட்டுடன் நம் தலைவர் கேப்டன் அவர்கள் நம்மை வழி நடத்திய வகையிலே மிகவும் கண்ணியத்தோடு, தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய, அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணியினருக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மக்களுக்காக நாம் போராடும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டமும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. இன்றைய ஆர்ப்பாட்டத்தை மகத்தான வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய அனைவருக்கும் தேமுதிக சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இரு வேறு பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும்…

ByBySenthil KumarJun 2, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...