தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், *புரட்சி அண்ணியார்* *கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்* அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாளையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (24.12.2025) திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.








