Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் இதுவரை பதிலளிக்காதது ஏன்?. அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று சிசிடிவி கேமராக்கள் பழுதானது ஏன்?, இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் மன்றாடியது ஏன்?. மாணவர்கள் போராட்டம் நடத்தும் வரை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாதது ஏன்?. அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுகவைச் சேர்ந்தவரா? என்பதை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மிக முக்கியமான கல்லூரியிலேயே இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் பொழுது இங்கு படிக்கும் மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மட்டும் அடக்குவதால், மாணவிக்கு நடந்த கொடூரம் இல்லை என்று ஆகிவிடாது. எனவே ஜனநாயக ரீதியாக கேள்விகள் கேட்பவர்களுக்கும், போராடுபவர்களுக்கும், இந்த அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். அந்த மாணவிக்கு ஏற்பட்டது போல் இனி எந்த மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாத வண்ணம் இந்த அரசு பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...