Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அடக்குமுறையை கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

அடக்குமுறையை கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

சமூக நலப்பணியாளர்கள், செவிலியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண வேண்டிய ஆளும் அரசு, அதற்கு மாறாக காவல்துறையின் மூலம் அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. போராட்டம் என்பது ஜனநாயகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. அந்த உரிமையை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைக்கும் உழைப்பாளிகளை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். கைது செய்வதை விட, அவர்களின் வாழ்க்கைக்கு உண்மையில் என்ன தேவை என்பதை உணர்ந்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும். திடீர் திடீர் கைது நடவடிக்கைகள் மூலம் போராட்டங்களை அடக்க முயல்வது ஜனநாயக விரோத செயலாகும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் எனவும் தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...