Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டி அறிக்கை

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டி அறிக்கை

பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகின்றது. இதில் 3வது யூனிட்டுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும் ‘பங்கர் டாப்’ எனப்படும் பகுதி நிலக்கரியை, அரவைக்கு முன்பு சேகரிக்கும் இடம் தரை மட்டத்தில் இருந்து சுமார் 100 அடிக்கு மேல் உள்ளது. நேற்று மாலையில் திடீரென பங்கர் டாப், அந்த அமைப்புடன் சரிந்து கீழே விழுந்துள்ளது. 350 டன் நிலக்கரி குவியல் கொட்டியதில் 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பும், பாதுகாப்பு உபகரணங்களும் இந்த அரசு செய்வது இல்லை. அவர்கள் மிக உயரமான இடத்திலிருந்து வேலை செய்யும் போது, நிலக்கரியில் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். இந்த விபத்திற்கான காரணம் நிர்வாக சீர்கேடு, 40 கோடிக்கு மேல் ஊழல் புகார் இருக்கின்றது. எனவே இந்த விபத்து குறித்தும், மரணங்கள் குறித்தும் தனி ஆணையம் அமைத்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். இந்த விபத்தை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது, பல ஆண்டுகளாக பலமுறை முறையிட்டும் யாரும் அதை செவி சாய்க்காததினால், மாபெரும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் இந்த அரசு தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, அவர்களின் குடும்பத்தாருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Releated Posts

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…

ByBySenthil KumarJan 18, 2025

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…

ByBySenthil KumarJan 18, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு

இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…

ByBySenthil KumarJan 11, 2025

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…

ByBySenthil KumarJan 10, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...