Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து சுமார் 30 மீட்டர் அளவில் ஏற்கனவே குப்பை தரம் பிரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு, மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த பகுதியில் ஏறத்தாழ சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் ஒரு கிடங்கு அமைக்கின்ற பணிகள் கோவை மாநகராட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பீளமேடு குடியிருப்பு சங்கங்கள் மூலமாக கோரிக்கை மனுக்கள் பல்வேறு அதிகாரிகளுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. பீளமேடு பகுதியில் புதிதாக மேற்கண்ட குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட்டால் ஏறத்தாழ 50 ஆயிரம் மக்களின் சுகாதாரம் என்பது, தற்பொழுதும், காலப்போக்கிலும் தொடர்ந்து சீர்கெடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தற்போதைய தலைமுறையும், எதிர்காலத் தலைமுறையும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படாமல் இருக்க, மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு அமைக்க வேண்டும். பீளமேடு பகுதியில் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, புதியதாக அமைய உள்ள குப்பை தரம் பிரிக்கும் கிடங்கினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

உலக ரத்த தான தினத்திற்கான அறிக்கை

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வ ரத்த தானம் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி வரும் அனைத்து ரத்த தானதாரர்களுக்கும் எனது மனமார்ந்த…

ByBySenthil KumarJun 15, 2026

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...