தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு.சொ.ராமுவசந்தன் அவர்களின் 15வது நினைவுதினத்தையொட்டி தலைமை கழகத்தில் இன்று (16.07.2024) அவரது திருவுருவப்படத்திற்கு இளைஞர்களின் எழுச்சி நாயகன் விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் விஜய் பிரபாகர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்சியில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.











