பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், ஃபெங்கல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா, கள்ளச்சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு (06.01.2025) அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஜனநாயக முறைப்படி வன்முறைக்கு இடம் கொடுக்காமல், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல், ராணுவக் கட்டுப்பாட்டுடன் நம் தலைவர் கேப்டன் அவர்கள் நம்மை வழி நடத்திய வகையிலே மிகவும் கண்ணியத்தோடு, தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய, அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணியினருக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மக்களுக்காக நாம் போராடும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டமும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. இன்றைய ஆர்ப்பாட்டத்தை மகத்தான வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய அனைவருக்கும் தேமுதிக சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை
Releated Posts
மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை
தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…
பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…