Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை

பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், ஃபெங்கல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா, கள்ளச்சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு (06.01.2025) அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஜனநாயக முறைப்படி வன்முறைக்கு இடம் கொடுக்காமல், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல், ராணுவக் கட்டுப்பாட்டுடன் நம் தலைவர் கேப்டன் அவர்கள் நம்மை வழி நடத்திய வகையிலே மிகவும் கண்ணியத்தோடு, தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய, அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணியினருக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மக்களுக்காக நாம் போராடும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டமும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. இன்றைய ஆர்ப்பாட்டத்தை மகத்தான வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய அனைவருக்கும் தேமுதிக சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...