டெல்டா பகுதி முழுவதும் நீரில் மூழ்கி விவசாய பெருமக்களுக்கு கடும் இன்னலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க ஆவணம் செய்ய வேண்டும். மேலும் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். நானும் டெல்டா காரன் தான் என்று எப்போதும் சொல்லிக் கொள்ளும் முதல்வர் அவர்கள், இந்த இன்னலான நேரத்தில் தான் டெல்டா மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். எனவே டெல்டா பகுதி விவசாயத்தை நம்பி இருப்பதனால், விவசாய மக்களுக்கு உடனடியாக ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பயிர் இழப்பீட்டுக்கான தொகையை வழங்கி, அவர்களை இந்த இன்னலிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
