Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. படுகொலை செய்யப்படுவது என்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாக அமையும். ஏற்கனவே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதோடு, இப்போது இந்த இரு இளைஞர்களும் மதுவிற்பனையைத் தடை செய்யக்கோரி, தட்டிக் கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன், அவர்களுக்குக் மரண தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும் சட்டம், ஒழுங்கை உறுதிபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Releated Posts

கஞ்சா போதை ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் படுகொலையை கண்டித்து அறிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் திரு.முத்துக்குமார் பணியாற்றி வந்தார். நாவலூர் பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் மற்றும் அவர்களின்…

ByBySenthil KumarMar 28, 2025

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த காவல் துறையை வரவேற்று அறிக்கை

சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது…

ByBySenthil KumarMar 27, 2025

தேமுதிக இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பத்திரிக்கை செய்தி – 22.03.2025

“இஃதார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (22.03.2025) மாலை 6.00 மணியளவில், தேமுதிக கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில்…

ByBySenthil KumarMar 22, 2025

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை…

ByBySenthil KumarMar 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...