Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம்மில் பிறந்து நம்முடைய உறவினர்களாக வாழும் அவர்களுக்கு இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை உணர்ந்து, அவற்றை நிவர்த்திக்க நாம் பாடுபட வேண்டும் என்பதையே இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. மாற்றுத் திறனாளிகள் நம்முடைய இரக்கத்திற்கோ, பரிதாபத்திற்கோ உரியவர்கள் அல்ல. அவர்களும் நம்மில் ஒருவராக அனைத்து உரிமைகளுக்கும், மரியாதைகளுக்கும் உரியவர்கள் ஆவார்கள். அத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். மாற்றுத் திறனாளிகளுக்கான வாரியம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. பெயரளவிற்கு அவ்வப்பொழுது சில சலுகைகளை யானைப் பசிக்கு சோளப் பொறி போல அறிவித்துவிட்டு ஆளும் அரசு விளம்பரம் தேடி கொள்கிறது.

மனிதர்களுக்கு இயற்கை ஏற்படுத்திய குறைபாட்டை, மனித முயற்சி மூலம் சரி செய்து மாற்றுத் திறனாளிகளும் அனைவரோடும் சரி சமமாக வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் இந்த விஞ்ஞான யுகத்தில் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கின்ற குறைபாடுகளை ஒவ்வொன்றாக களைந்து, அவர்கள் அத்தகைய குறைபாட்டு உணர்வுகளுக்கு ஆளாகாமல், வாழ்வதற்கு உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். கடந்த 25 ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக தேமுதிக சார்பாகப் பல வகையிலும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு உதவி புரிந்து வருகிறோம். அதே போலச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மாற்றுத் திறனாளிகள் எல்லாவித உயர்வும் பெற்று வாழ தே.மு.தி.க. சார்பில் எனது வாழ்த்துக்களை இந்த நாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Releated Posts

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…

ByBySenthil KumarJan 18, 2025

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…

ByBySenthil KumarJan 18, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு

இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…

ByBySenthil KumarJan 11, 2025

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…

ByBySenthil KumarJan 10, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...