Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம்மில் பிறந்து நம்முடைய உறவினர்களாக வாழும் அவர்களுக்கு இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை உணர்ந்து, அவற்றை நிவர்த்திக்க நாம் பாடுபட வேண்டும் என்பதையே இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. மாற்றுத் திறனாளிகள் நம்முடைய இரக்கத்திற்கோ, பரிதாபத்திற்கோ உரியவர்கள் அல்ல. அவர்களும் நம்மில் ஒருவராக அனைத்து உரிமைகளுக்கும், மரியாதைகளுக்கும் உரியவர்கள் ஆவார்கள். அத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். மாற்றுத் திறனாளிகளுக்கான வாரியம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. பெயரளவிற்கு அவ்வப்பொழுது சில சலுகைகளை யானைப் பசிக்கு சோளப் பொறி போல அறிவித்துவிட்டு ஆளும் அரசு விளம்பரம் தேடி கொள்கிறது.

மனிதர்களுக்கு இயற்கை ஏற்படுத்திய குறைபாட்டை, மனித முயற்சி மூலம் சரி செய்து மாற்றுத் திறனாளிகளும் அனைவரோடும் சரி சமமாக வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் இந்த விஞ்ஞான யுகத்தில் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கின்ற குறைபாடுகளை ஒவ்வொன்றாக களைந்து, அவர்கள் அத்தகைய குறைபாட்டு உணர்வுகளுக்கு ஆளாகாமல், வாழ்வதற்கு உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். கடந்த 25 ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக தேமுதிக சார்பாகப் பல வகையிலும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு உதவி புரிந்து வருகிறோம். அதே போலச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மாற்றுத் திறனாளிகள் எல்லாவித உயர்வும் பெற்று வாழ தே.மு.தி.க. சார்பில் எனது வாழ்த்துக்களை இந்த நாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Releated Posts

தேமுதிக கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி: – 07.05.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (07.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில்…

ByBySenthil KumarMay 7, 2025

தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (01.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் மே…

ByBySenthil KumarMay 1, 2025

தேமுதிக மே தின வாழ்த்து செய்தி

ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும்…

ByBySenthil KumarApr 30, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்…

ByBySenthil KumarApr 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...