Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளில் 13 மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த இலங்கை அரசை கண்டித்து அறிக்கை

இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளில் 13 மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த இலங்கை அரசை கண்டித்து அறிக்கை

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடித் தான் மீன் பிடிப்பதற்கு வருகின்றனர். அவர்களை அத்துமீறி கைது செய்து அவர்களின் உடைமைக்கும், உயிருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலே தொடர்ந்து இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்திற்கு உரிய விஷயம். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அவர்களை படகுகளுடன் சிறைப்பிடிப்பதும், மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. பலமுறை இந்தியா அரசு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும்  கைது நடவடிக்கையிலிருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லை.  இது தமிழக மீனவர்களிடையே மிகப் பெரிய ஒரு கொந்தளிப்பையும், மன வேதனையும் உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு “இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்” இந்த நாளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கி மனித நேயத்தோடு நீதியும், நேர்மையும் நிலைநாட்ட வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று…

ByBySenthil KumarNov 13, 2025

தேமுதிக தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarNov 11, 2025

டெல்லி தலைநகரில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 8 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

ByBySenthil KumarNov 11, 2025

விருதுநகரில் கோவிலில் பாதுகாவலர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

விருதுநகர் மாவட்டம், HR & CE கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியில் இரு பாதுகாவலர்கள் (2 பேர்) கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம், தமிழகம்…

ByBySenthil KumarNov 11, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...