Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின் வரலாற்றில், மறக்க முடியாத நாள் இன்று (01-07-2026) மருத்துவர்கள் தினம்!. இந்த ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவத் துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், மருத்துவர்களுக்கு அவர்களின் தகுதிக்கும், பணிச்சுமைக்கும் ஏற்ற ஊதியம் வழங்கப்படாதது மிகவும் வேதனைக்குரியதாகும். நீண்ட காலமாகவே மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசின் முன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்களின் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். இந்த உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரையே பணயம் வைத்து மக்களைக் காப்பாற்ற அயராது உழைத்த மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூர்ந்து, அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசும், தமிழக முதல்வர் அவர்களும் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். “இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும், மனித கடவுளாக அனைவராலும் பார்க்கப்படும் மருத்துவர்களை இந்த நாளில் வாழ்த்துவோம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உலக மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

மேகதாது அணை விவகாரம், தமிழக அரசு டில்லி பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி அறிக்கை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக திரு.வெங்கடநாராயணா  அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே கர்நாடக மாநில முதலமைச்சர்…

ByBySenthil KumarJun 27, 2026

பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் திரு.பாக்யராஜ்  அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (27.06.2026) காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.தமிழ்த் திரையுலகின்…

ByBySenthil KumarJun 27, 2026

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...