மருத்துவர்களின் வரலாற்றில், மறக்க முடியாத நாள் இன்று (01-07-2026) மருத்துவர்கள் தினம்!. இந்த ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவத் துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், மருத்துவர்களுக்கு அவர்களின் தகுதிக்கும், பணிச்சுமைக்கும் ஏற்ற ஊதியம் வழங்கப்படாதது மிகவும் வேதனைக்குரியதாகும். நீண்ட காலமாகவே மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசின் முன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்களின் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். இந்த உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரையே பணயம் வைத்து மக்களைக் காப்பாற்ற அயராது உழைத்த மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூர்ந்து, அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசும், தமிழக முதல்வர் அவர்களும் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். “இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும், மனித கடவுளாக அனைவராலும் பார்க்கப்படும் மருத்துவர்களை இந்த நாளில் வாழ்த்துவோம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உலக மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.




