தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி இன்று (13.01.2026) காலை 10 மணிக்கு புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில், தலைமை கழகம் (கேப்டன் ஆலயம்) கோயம்பேட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் பொருட்கள் (அரிசி 1 கிலோ, கரும்பு, நெய், சி.பருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் கொத்து) பொதுமக்களுக்கும், கழக நிர்வாகிகள் அனைவரும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலைய செயாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர் திரு.SSS.U.சந்திரன் அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜய் பிரபாகர் அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.







