Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • Blog
  • தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டி — அறிக்கை

தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டி — அறிக்கை

“டிட்வா” புயல் வலுவிழந்திருந்தாலும், அதன் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குண்டும் குழியுமான பல சாலைகள் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதியப்படுகின்றனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுவதால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பது காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

தொடர்ச்சியான மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, அவர்கள் தேவையான உணவு, மருந்து, உடை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் வழங்க வேண்டும். எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள நமது கழக நிர்வாகிகள் நேரடியாக கள ஆய்விற்குச் சென்று, “நம்மால் முடிந்த உதவிகளை” மக்களுக்கு செய்து ஆறுதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சுரங்கப் பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தமிழக அரசையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் – தேமுதிக வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை கடனில் மூழ்கும் அபாயம்…

ByBySenthil KumarOct 22, 2025

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 11.07.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (11.07.2025) சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர வேட்கையை…

ByBySenthil KumarJul 11, 2025

சிறு, குறு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் வளம் பெற வேண்டி வாழ்த்து

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு தொழில்களையும், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தொழில் முனைவோர், உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறு, குறு தொழில்கள் வெற்றியடைந்தால் மட்டுமே நமது நாடு…

ByBySenthil KumarJun 27, 2025

திமுக கொடி பொருத்திய காரில் பெண்களைத் துரத்திச் சென்ற நபர்களுக்கு ஐந்து ஆண்டுகால தண்டனையைத் தமிழக முதல்வர் பெற்றுத் தருவாரா என்பது குறித்து அறிக்கை

பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போல், “ஒரு பெண் இரவு நேரத்திலும் தனியாக,…

ByBySenthil KumarJan 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...