தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 13.11.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற்றது. அதில் கட்சியின் முக்கிய வளர்ச்சி பணிகள், மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயாளர்கள் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், திரு.எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் அவர்கள், திரு.எஸ்.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், திருமதி.சுபாரவி,Ex:MLA., அவர்கள், மற்றும் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தேமுதிக, தலைமை கழகம் , (கேப்டன் ஆலயம்), கோயம்பேடு, சென்னை – 600107.








