Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (01.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் மே தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடி ஏற்றி நிர்வாகிகளுடன் மே தினத்தை கொண்டாடினார்கள். தொழிற்சங்கத்தின் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சீருடைகள் வழங்கினார். மேலும் தொழிலாளர்களுக்கு உணவு அளித்து விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., கழக துணைச் செயலாளர்கள் திரு. எம்.ஆர்.பன்னீர்செல்வம், அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜயபிரபாகர் அவர்கள், தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.G.காளிராஜன், தொழிற்சங்க பேரவை தலைவர்கள் திரு.பொன்.இளங்கோவன், தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு.P.வேணுராம், தொழிற்சங்க பேரவை துணைச் தலைவர்கள் திரு.K.V.பாலாஜி,B.Com., தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர்கள் திரு.S.முருகராஜ்,M.A.,B.L., திரு.ரா.ஜெயபால் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Releated Posts

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 11 பேர்க்கு இரங்கல் செய்தி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.…

ByBySenthil KumarDec 1, 2025

கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு.கு.நல்லதம்பி,Ex.MLA., அவர்களின் சகோதரி மறைவிற்கு இரங்கல் செய்தி

கழக உயர்மட்ட குழு உறுப்பினர், திரு.கு.நல்லதம்பி,Ex.MLA., அவர்களின் சகோதரியும், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், 99வது வட்ட துணைச் செயலாளர் திரு.G.N.பிரேம்குமார் அவர்களின் தாயார்…

ByBySenthil KumarNov 29, 2025

 நடிகை அம்பிகா – ராதாவின் தாயார் திருமதி.சரசம்மா நாயர் அவர்களுக்கு இரங்கல் செய்தி

நடிகை அம்பிகா – ராதாவின் தாயார் திருமதி.சரசம்மா நாயர் (87) வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.…

ByBySenthil KumarNov 29, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...