தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கொடியேற்றி வைத்து கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், “கேப்டன் முரசு” என்ற மாத இதல் புத்தகத்தையும் வெளியீட்டு கழக தொண்டர்களுடன் வெள்ளி விழாவை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர்கள் திரு.L.K.சுதீஷ் அவர்கள், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.




