Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • Blog
  • திமுக கொடி பொருத்திய காரில் பெண்களைத் துரத்திச் சென்ற நபர்களுக்கு ஐந்து ஆண்டுகால தண்டனையைத் தமிழக முதல்வர் பெற்றுத் தருவாரா என்பது குறித்து அறிக்கை

திமுக கொடி பொருத்திய காரில் பெண்களைத் துரத்திச் சென்ற நபர்களுக்கு ஐந்து ஆண்டுகால தண்டனையைத் தமிழக முதல்வர் பெற்றுத் தருவாரா என்பது குறித்து அறிக்கை

பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போல், “ஒரு பெண் இரவு நேரத்திலும் தனியாக, பயமின்றி செல்ல முடிந்தால், அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது” என்பதற்கிணங்க இன்றளவும் அந்த நிலை நம் தமிழ்நாட்டில் வந்திருக்கிறதா? திமுகக் கொடியைப் பொருத்திய காரில் இருந்த சிலர், குழந்தையுடன் பயணித்த பெண்களையும், குடும்பத்தினரையும் துரத்தியும், பயமுறுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் பெரிய அரசியல் பின்புலம் உடையவர்களாக இருந்தாலும், காவல்துறை உடனடியாக அவர்களை யார் என்று கண்டுபிடித்து வெளி உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்தாலே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை” என்று அறிவித்திருக்கிறார். திமுகக் கொடியைப் பொருத்திய காரில் வந்த நபர்கள் அந்தக் குடும்பத்தினரை வீடு வரை துரத்தியும், பயமுறுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, முதல்வர் அவர்கள் சொன்ன 5 ஆண்டு கால தண்டனையை, முதல் வழக்காக இந்தக் நபர்களுக்கு வழங்க தமிழக முதல்வர் காவல் துறைக்கு ஆணையிடுவாரா?, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா?.

Releated Posts

தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டி — அறிக்கை

“டிட்வா” புயல் வலுவிழந்திருந்தாலும், அதன் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும்…

ByBySenthil KumarDec 2, 2025

டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் – தேமுதிக வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை கடனில் மூழ்கும் அபாயம்…

ByBySenthil KumarOct 22, 2025

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 11.07.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (11.07.2025) சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர வேட்கையை…

ByBySenthil KumarJul 11, 2025

சிறு, குறு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் வளம் பெற வேண்டி வாழ்த்து

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு தொழில்களையும், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தொழில் முனைவோர், உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறு, குறு தொழில்கள் வெற்றியடைந்தால் மட்டுமே நமது நாடு…

ByBySenthil KumarJun 27, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...